டிசம்பர்- 23 விவசாயிகள் தினம்! -வாழ்த்துகளை_பகிர்வோம்!

இன்றைய நாகரீக வளர்ச்சியில் …
எல்லாவற்றையும் கண்டுபிடிக்க எண்ணற்ற உபகரணங்கள் வந்தாலும்..

நாம் உண்ணும் உணவு பொருளை விளைவிக்க விவசாயிகளால் மட்டுமே முடியும்..

இதில் லாபம் பெரிதாக இல்லையென்றாலும்
மண் வளத்தை பக்குவப்படுத்தி மக்கள் வாழ
தன் இரத்தத்தை வேர்வையாக சிந்தி ஊழியம் செய்யும் ஒப்பற்ற ஜீவன்களான விவசாயிகள் தினத்தை நினைவு கூறுவதில்
பெருமிதம் கொள்கிறது
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில விவசாயிகள் அணி பிரிவு.!

தோழர்களே…
‘இந்தியா ஒரு விவசாய நாடு’ என்ற பழம்பெருமையைப் பறைசாற்றிக் கொள்ளும் அரசாங்கங்கள், விவசாயத்தை மேம்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் மூலமாக நாட்டை மட்டுமல்ல
விவசாய பெருமக்களையும் வீழ்ச்சியில்தான் தள்ளிக் கொண்டிருக்கின்றன.!

உண்ண உணவு கொடுக்கும்
விவசாயி உணவில்லாமல்
எலிக்கறி தின்று
மரணிக்கும் அவலம்.

பொதுவாக விவசாயத்திற்கு
அரசாங்கத்தின் போதிய ஆதரவு இல்லாததால், பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தை விட்டு விரக்தியோடு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.
மற்றொரு பக்கம், ‘விவசாயம் இனி இளைஞர்கள் கைகளில்’ என்ற ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வாரின் கூற்றை உண்மையாக்கும் வகையில் வருங்கால தலைமுறையின் கவனம் விவசாயத்தின் பக்கம் திரும்பி வருவது, ஆரோக்கிய மாற்றம்.

அரசாங்கம் அப்படியான இளைஞர்களை கண்டறிந்து
அவர்களுக்கு மாணியமாக உபகரணங்கள் வழங்கி ஊக்குவிக்கபட வேண்டும் என இந்த நல்ல நாளில்
மனிதநேய ஜனநாயக கட்சியின் விவசாய அணி பிரிவு அரசிற்கு கோரிக்கையாக வைக்கிறது.

இனி வரும் காலங்களில்
விவசாயம் பெருமதிப்புமிக்கதாக
மாற விவசாயத்தையும்,
அதை நம்பியுள்ள  விவசாயிகளுக்கும் இந்த சிறப்பு மிக்க நாளில்
அனைவரும் அவர்களுக்கு வாழ்த்துகளை பகிர்வோம்….

இனி வரும் காலங்களில் விவசாயத்தையும் விவசாயிகளையும் போற்றுவோம்.!

வாழ்த்துகளுடன்,
நாகை முபாரக்,
மாநில விவசாய அணி செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி